Skip to main content

ஒரு Deadly Story சொல்லட்டுமா

ஆஸ்திரேலிய அபாரிஜினல்ஸ்தான் (Australian Aboriginals - பழங்குடி மக்கள்) ஆஸ்திரேலிய நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தர்கள். அபாரிஜினல் பலர், போதைப் பழக்கத்துக்கு அடிமைப்பட்டு இருப்பதை கவனிச்ச ஆஸ்திரேலிய அரசு, போதை எவ்வளவு ஆபத்தானதுன்னு சொல்ல ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பிச்சது.

பழங்குடி மக்கள் அதிகமா வாழ்கிற பகுதிகளில், பெரிய பெரிய விளம்பர பலகைகள் வைத்து அவர்களுக்கு புத்தி சொல்ற மாதிரி “DRUGS ARE DEADLY” என்று வாசகங்களை CAPITAL LETTERS-ல் எழுதி, லைட் எல்லாம் போட்டு வைத்தனர். ஆஸ்திரேலிய அரசின் பொறுப்பான இந்தச் செயலை மகிழ்ந்து பாராட்டாமல், இதைப் பார்த்து மிகுந்த எரிச்சலானார்கள், பழங்குடி இனத்தவரின் மூத்த குடிமக்கள். இல்லியா, பின்ன? பழங்குடியின் இளையோர் “deadly” என்ற ஆங்கில வார்த்தையை “excellent”, “cool”, “super” என்ற அர்த்தத்தில் உபயோகிப்பார்கள். உதாரணத்துக்கு சில: “you look deadly, man”, “that’s a deadly idea”. நாம “மரண மாஸ்”, “கொன்னுட்ட போ!” என்று சொல்லுவோமில்ல, அந்த மாதிரி. உள்ளூர் பழங்குடியின சமூகத்துடன் எந்த முன்ஆலோசனையும் செய்யாமல் “Drugs are super cool” என்ற எதிர்கருத்தை விளம்பரம் செய்து மொக்கை வாங்கிய அரசின் நடவடிக்கைதான் Consumer Consultation எவ்வளவு முக்கியம் என்று காண்பித்தது. அபாரிஜினல் நகைச்சுவை பேச்சாளர் (aboriginal standup comedian) கெவின் க்ரோபினேரி (https://www.facebook.com/KevinKropinyeri), ஒரு நிகழ்ச்சியில் சொல்லி, நான் கேட்டது.


ஒருவளை நீங்கள் மெல்பனில் வசித்தால் கெவின் க்ரோபினேரி, வரும் ஏப்ரல் 6 முதல் 18 வரை நடக்கும் மெல்போர்ன் நகைச்சுவை விழாவில் நிகழ்ச்சி நடத்துகிறார். 100% சிரிப்புக்கு நான் கியாரண்டி!

https://www.comedyfestival.com.au/2021/shows/kevin-kropinyeri


-திரு
https://facebook.com/writerthiru #தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை #AboriginalComedian #StandupComedy #DeadlyComedy #மரணகாமெடி #காமெடி #ஆஸ்திரேலிய #ஆஸ்திரேலியபழங்குடி

Comments

Popular posts from this blog

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.   முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;   ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல;  ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் கேட்க,  அடுத்த பதின

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்

கல் தோன்றி, மண் தோன்றா

  “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி”  இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.   முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.   அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)   சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் வரும் பாடல்தான் அது.  பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?  வையகம் போர்த்த, வயங்கு ஒலிநீ