Skip to main content

Posts

Showing posts from June, 2019

சோறு முக்கியம் பாஸ்

அடிலைடில் (Adelaide) படிக்கிற மாதிரிக்கூட்டத்தோட கூட்டமாய் நடித்துக்கொண்டிருந்த போது ஒரு நாள், ஒரு நண்பர் குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்தோம்.  'சாப்பாட்டுக்கு என்ன பண்றீங்க’ எனக் கேட்டார் அவர். நா( நாங்கள்)    - ‘ஏன் நாங்களே சமைச்சுதான் சாப்பிடுறோம்’ -  அ ( அவர்) : 'ரிஸ்க் இல்ல?' -   நா: 'ஏன், இதுவரைக்கும் எல்லாருமே உயிரோடதான் இருக்கோம்!'. நா: 'ஆமா, நீங்க பேமிலி தானே? நேத்து (வியாழக்கிழமை) என்ன டின்னர் சாப்டீங்க?' அ: 'கொஞ்சம் பிஸி. கடையிலிருந்து பிட்ஸா' நா: 'நாங்களும் காலேஜ் போயிட்டு வீட்டுக்கு லேட்டா வந்தாலும் சப்பாத்தி, சாம்பார் சாதம், பெப்பர் சிக்கன் ஃப்ரை செஞ்சு சாப்ட்டோம்' நா: 'வேணா, நாங்க ஒரு நாள் உங்க வீட்டுக்கு வந்து சமைச்சு ஒரு விருந்து தர்றோமே' என்று சொன்னபடி ஒரு நாள் போய் தடபுடலாய் பல்வகை விருந்து செய்து எல்லோரும் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு வந்தோம். எதோ ஒரு நாளைக்கு சமைச்சுட்டிங்க, தினமும் சமைக்கிற எங்களுக்குத்தான் தெரியும்னுதான சொல்ல வர்றீங்க? அதான் இல்ல! எங்களுக்கு எல்லாம் அப்போ சமைச்சு சாப்பிடறதுதான் மெயின் பிசினஸ். இந

Stickheads

“Appa, what is a stickhead?”, Vishnu asked me one day. Understanding which word he asked about (obviously), I asked him when, where and who said the word. “Amma said it” “When did she say it?” “Amma was taking me to the Library (in car) and there was a bad car driver and Amma said, stickhead!” “Well, it makes sense now. Some people have very little or no brains and we call them stickheads!  Because, a stick is so thin and do not have a brain. Remeber; Only adults use that word, so you don’t.” Dear Children, it’s easy to ask questions and it’s difficult to provide age-appropriate answers :-) # Stickheads # Parenting https://www.facebook.com/ponthirumurugan/posts/10157029315206708

தாய்த்தமிழ்ப்பள்ளியின் ஏழாம் ஆண்டு இலக்கிய விழா

கடந்த சனிக்கிழமை, தாய்த்தமிழ்ப்பள்ளியின் இலக்கிய விழா சிறப்பாய் நடைபெற்றது. விஷ்ணு கலந்துகொள்வது இதுவே முதல் முறை. சிறுவர் சிறுமியர் ஒவ்வொருவரும் மேடை ஏறி, ஒலிப்பெருக்கியில் (மென்குரலில் பேசும் குழந்தைகளுக்கு மிகவும் உதவியது), நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி இருந்த அவையின் முன்பு தமிழ்ப் பேசும்படி அமைத்திருந்தது நன்றாக இருந்தது. தமிழ்ப் பாட்டு, திருக்குறள், பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி என்று பாலர் பிரிவு (Pre-School Kindy) முதல் ஏழாம் வகுப்பு+ வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அசத்தலாய் தமிழ்த் திறமையை வெளிப்படுத்தி மகிழ்வித்தனர். 'பேசிக்கலி நான் ஒரு ஷை டைப்' என்று என்னைப் போல் இருக்கும் விஷ்ணுவுக்கு நாங்கள் வைத்த இலக்கு 'மேடை ஏறி நடுவர்கள் முன் மனனம் செய்தத் தமிழ்ப்பாட்டை முழுமையாக சொல்லி விட வேண்டும், அவ்வளவே'. அதற்கு பரிசும் (Beyblade - மாடர்ன் பம்பரம்) நாங்களே வாங்கி வைத்து விட்டோம். தெரிந்த நண்பர்களிடத்தில் கூட அந்தப் பாடலைச் சொல்லாத விஷ்ணு, பெருந்திரளாய் மக்கள் கூடியிருந்த இலக்கிய விழாவில் நிறுத்தி, நிதானமாய் சரியான உச்சரிப்புடன் சொல்லி முடித