Skip to main content

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

TLDR
If you know a language other than English and haven’t read or written in that language lately, please start reading and writing. Generations of knowledge do not get passed on when a language is forgotten; especially when we stop writing and reading in that language!

Choose Tamil for reading and writing in social media!


 திடீரென்று ஏன் முகநூலில், அதுவும் தமிழில் எழுதுகிறேன் என்று நிறைய வாசகர்கள் (?!) கடிதம், தொலைபேசி, வாட்ஸப் மற்றும் நேரில்.... சரி..சரி... யாரும் கேக்கல... நானே சொல்றேன்!

 நான் வலைப்பதிவைத் தொடங்கியபோது, என்னுடைய பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, நிறைய பேர் படித்து பயன்பெறட்டும் என்று ஆங்கிலத்தில் எழுதினேன். படிக்கிறார்களோ, இல்லையோ, ஆளில்லாக் கடையில் டீ ஆத்துவது போல, நான் பாட்டுக்கு இங்கே (http://thirumurugan.blogspot.com/) எழுதித் தள்ளினேன்! அப்போது தமிழ் வலைப்பதிவுகளின் (http://www.tamilmanam.net/) தீவிர வாசகனாய் மட்டுமே இருந்தேன். காரணம், 2003-ல் தமிழில் ஒவ்வொரு எழுத்தாய்க் கோர்த்து எழுதி முடிப்பதற்குள் என் கற்பனைக் குதிரை ஓடியாடிக் (??!!) களைத்துப் படுத்தே விடும். இப்போது கூகுல் ஒலிபெயர்ப்பு (Transliterate - https://www.google.com/intl/ta/inputtools/try/) மற்றும் கூகுல் மொழிபெயர்ப்பு (https://translate.google.com) போன்ற வலை மென்பொருட்களை உபயோகிப்பது சுலபமாய் உள்ளது.

 2005-ல் நான் ஆஸ்ட்ரேலியாவுக்கு வந்தபோது, தமிழைப் பேசவும், புரிந்துகொள்ளவும் கூடிய, ஆனால் தமிழைப் படிக்கவோ எழுதவோ முடியாத தமிழ் மாணவ நண்பர்களைக் கண்டேன். அவர்கள் இங்கே பிறந்தவர்கள் அல்ல! சென்னை, சேலம், கோவை போன்ற மெட்ரோக்களில் பிறந்து மெட்ரிகுலேஷனில் படித்து ஆஸ்ட்ரேலியா வந்த அக்மார்க் தமிழ்ப் பசங்க, பொண்ணுங்க! கடந்த பத்து வருடங்களில், இந்த ‘தமிழ் பேச மட்டும் தெரிந்தவர்கள்’ எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. நானும் அந்த எண்ணிக்கையில் ஒன்றாக மாறாமல் இருக்கவே இங்கே எழுதுகிறேன்.

 சமீப காலமாய் என்னை நானே கேட்டுக்கொண்டது என்னவெனில் நாம் தமிழ்ப் படித்து, தமிழ்ல எழுதலைன்னா நம்ம குழந்தைகள் எப்படி தமிழ் படிக்க, எழுதக் கற்றுக்கொள்வார்கள் என்று. ஒரு மொழியை படிக்க, எழுத மறப்பதுதான் அம்மொழியின் வீழ்ச்சிக்கு முதல் அறிகுறி.

ஆங்கிலம் அல்லாத ஒரு மொழி, உங்களுக்கு தெரியுமெனில், அது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, உருது, ஹிந்தி, வங்காளம், துளு, மாண்டரின், காண்டனீஸ், பிரென்ச், இத்தாலியன் என்று எதுவாகினும் பரவாயில்லை, அம்மொழியில் எழுதுங்கள் அல்லது குறைந்த பட்சம் படியுங்கள்.

வாரம் நான் இரண்டு முறை பார்க்கும் ஃபேஸ்புக்கில் தான் தலைமுறைகள் கடந்து எல்லோரும் (ஃபேஸ்புக் பயனர்கள் 2.4 பில்லியன், உலக மக்கள் 8 பில்லியன்!) இருப்பதாகப்பட்டது! நம் தகவல்களை விற்றுக் காசு பார்க்கும் ஃபேஸ்புக், தமிழ் வளர்க்கவும் உதவட்டுமே!

 குழந்தைகளை இரண்டாம் மொழி ஒன்றைப் படிக்க, எழுத ஊக்கப்படுத்துங்கள். ஓரிரு வார்த்தை கொண்ட பதில்களாய் இருந்தாலும், பதில் (கமெண்ட் ) அளியுங்கள். ஆங்கிலத்தில் ஏன் எழுதவில்லை என்று மார்க் ஸுக்கர்பர்க் கோபித்துக்கொள்ளமாட்டார்!

 --திரு

 பின்குறிப்பு: உண்மையான தமிழனாய் இருந்தால் இதை லைக்/ஷேர்/ஸப்ஸ்க்ரைப் செய்து, தமிழில் எழுதி மகிழுங்கள்....(இப்பத்தான்யா இவன் பாய்ண்டுக்கு வந்திருக்கான்)

 https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன்

 #தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை #தாய்மொழி #முதல்_மொழி #Bilingual #இருமொழி

Comments

Popular posts from this blog

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.   முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;   ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல;  ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் கேட்க,  அடுத்த பதின

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்

கல் தோன்றி, மண் தோன்றா

  “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி”  இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.   முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.   அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)   சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் வரும் பாடல்தான் அது.  பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?  வையகம் போர்த்த, வயங்கு ஒலிநீ