Skip to main content

அனைவருக்குமான ஆஸ்ட்ரேலியா



"தீப்பந்தம் ஏந்தும் கை"யை மட்டும் சேர்த்தால் தேமுதிமுக கொடி போல மாறிவிடும் அபாயம் கொண்டதுதான், ஆஸ்ட்ரேலிய பூர்வகுடிமக்களின் (Australian aborigines/indigenous) கொடி. கறுப்பு பூர்வகுடிமக்களையும், சிவப்பு நிலத்தையும், மஞ்சள் சூரியனையும் குறிப்பன. டாரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளின் குடிமக்களின் கோடி பச்சை (நிலம்), நீலம் (நீர்), கருப்பு (மக்கள்) , வெள்ளை (தலைப்பாகை மற்றும் ஐமுனை நட்சத்திரம்) நிறங்களைக் கொண்டிருக்கும். ஆஸ்ட்ரேலியாவின் கேப் யார்க் நிலப்பகுதிக்கும், நியூ கினியா தீவுக்கும் இடைப்படட்ட கடற்பகுதியில் இருக்கும் 274 தீவுகள் டாரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகள் என்றும், அதன் குடிமக்கள் டாரஸ் ஸ்ட்ரெய்ட் தீவினர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த வாரம் (27 May - 3 June) ரீகன்ஸிலியேஷன் (National Reconciliation Week) வாரம். அதாவது, ஆஸ்ட்ரேலிய பூர்வகுடிமக்கள் மற்றும் டாரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளின் குடிமக்களுக்கும் (Torres Strait Islanders), இதர ஆஸ்ட்ரேலிய குடிமக்களுக்கும் (non-indigenous) இடையேயான உறவுகளை பலப்படுத்தி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயல்களை ஊக்குவிக்கும் வாரம். இந்த ஆண்டின் கருப்பொருள் (theme) உண்மையைய் உரக்கச் சொல்லி, ஒற்றுமையாக நடப்போம் துணிவோடு "Grounded in Truth, Walk Together in Courage" 1770-ஆம் வருடம், கேப்டன் குக் ஆஸ்ட்ரேலியாவை "கண்டபோது" அங்கு பல்லாயிரம் ஆண்டுகளாய் வசித்து வந்த பழங்குடியினரைக் கண்டு கொள்ளாமல், "யாரும் வசிக்காத நிலம்" (Terra Nullius) என்று பிரிட்டிஷ் காலனியாக அறிவிக்க பரிந்துரை செய்தார். பின்பு (1788) வந்த பிரிட்டிஷ் மக்கள் இந்த பழங்குடியினரை அப்புறப்படுத்த நடத்திய நிகழ்வுகள் பெரும் வரலாற்று சோகங்கள். அவர்களை படாத பாடுபடுத்தி, துப்பாக்கியால் சுட்டு, மனிதர்கள் குடிக்கும் நீர்த்தேக்கங்களில் விஷம் வைத்து, மலைகளில் மேலிருந்து தள்ளிக் கொன்றனர். எஞ்சிய பழங்குடியினரின் குழந்தைகளுக்கு நவ நாகரீக வாழ்வு முறையைக் கற்றுத் தருகிறோம் என்று தாய் தந்தை, உறவினரிடமிருந்து பிரித்து (திருடி), அரசால் அனுமதிக்கப்பட்ட கிறிஸ்டியன் மிஷனரிக்கள் ‘திருடப்பட்ட தலைமுறை’களை (Stolen Generations) உருவாக்கினர்; இச்செயல்கள் ஏற்படுத்திய சமூக, உளவியல் பாதிப்புகளை ஒப்புக்கொண்டு, 2008-ஆம் ஆண்டு அரசு மன்னிப்புக் கோரியது.

நடந்த வரலாற்று நிகழ்வுகளை மறக்காமல்/மறைக்காமல், உண்மையைப் பகிர்ந்து, மீண்டும் பழைய தவறுகள் நடக்காமல் ஆஸ்ட்ரேலிய பூர்வகுடிமக்களை சமமாக மதித்து, அவர்களை உள்ளடக்கி இந்த சமுகம் நடக்க வழி வகுக்க வேண்டும். மண்ணின் மைந்தர்களாகிய அவர்களுக்கு, நாம் செய்யக்கூடிய சிறிய பிரதிபலன் இதுவே. --திரு #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியவாழ்க்கை https://www.reconciliation.org.au/what-is-reconciliation/#what-is-reconciliation https://australianmuseum.net.au/learn/cultures/atsi-collection/cultural-objects/indigenous-australia-flags/ https://www.creativespirits.info/aboriginalculture/politics/stolen-generations/sorry-apology-to-stolen-generations மற்ற பதிவுகள்: கறுப்பும் வெளுப்பும் - https://www.facebook.com/photo.php?fbid=10156953064681708 உழைப்பாளர் தின விடுமுறை - https://www.facebook.com/pthirumurugan/posts/10156927136741708

Comments

Popular posts from this blog

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.   முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;   ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல;  ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் கேட்க,  அடுத்த பதின

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்

கல் தோன்றி, மண் தோன்றா

  “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி”  இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.   முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.   அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)   சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் வரும் பாடல்தான் அது.  பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?  வையகம் போர்த்த, வயங்கு ஒலிநீ