Skip to main content

QTM குயீன்ஸ்லாந்தின் முத்தமிழ் விழா

 குயீஸ்லாந்தின் முத்தமிழ் விழா



நன்றி!
‘நீங்க தான் நல்லா எழுதுவீங்கல்ல? இன்றைய நிகழ்ச்சி பற்றி சின்னதா முகநூலில் எழுதி போடுங்களேன்’ என்று நம்பிக் கேட்டுக் கொண்ட திருமதி. டாக்டர் வாசுகி Vasugi Nadarajah Sithirasenan அவர்கள். இதோ எழுதிட்டேன். என்ன, எழுதி, வெளியிட, கொஞ்சம் தாமதமாயிடுச்சு (after all, just 496 days!). மன்னிக்க!

கொஞ்ச நாளைக்கு முன்னாடி காலங்காத்தால ஒரு சந்தேகம். இசைத்தமிழ், நாடகத்தமிழ் தெரியும்: ஆனா இயல் தமிழ்-னா என்னன்னு. அப்புறம் நமக்கெதுக்கு அதெல்லாம் என்று காலைச் சிற்றுண்டி சாப்பிடப் போய் மறந்து போனேன்.

நல்ல வேலையாக, முத்தமிழ் பற்றியும் தெரியாதவர்களுக்காக இயல் (இயல்பாக நாம் பேச, எழுத பயன்படும் தமிழ்), இசை (பாடுவதற்கு ஏற்ற/ பாடும் தமிழ்) மற்றும் நாடக (இது டிராமா தமிழ் அல்ல… ஆடல் கலையை வளர்க்கும் கூத்து/நடனத்துக்ககான தமிழ்) தமிழ் மொழிகளை விளக்கிச் சொல்லி குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றத்தின் (Queensland Tamil Mandram) முத்தமிழ் மாநாட்டை தொடங்கி வைத்தார்கள். நன்றிகள்!

பொதுவாக இந்த மாதிரி இலக்கிய விழாக்கள் தொடங்கும்போது, வாத்திய கோஷ்டி ஒன்று வந்து மங்கள இசை பாடி, தாலாட்டி தூங்க வைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியெல்லாம் இல்லாமல் ‘Starting with a bang’ என்று தமிழ்த்தாய் வாழ்த்து, QTM தலைவர் வாசுகியின் வரவேற்புரை, பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே பாடல், மன்றத்துடன் குறள் (Kural with QTM) பகுதியில் சிறுவர்- சிறுமியர் வந்து அவர்களுக்குப் பிடித்த திருக்குறள்களை சொன்னார்கள்.

ஒரு நாலு வயசு சிறுவன் வந்து நாலுக்கும் அதிகமான திருக்குறள்களை அதன் பொருளுடன் சொல்லி அசத்தி, ‘எனக்கு எத்தனை குறள் தெரியுமென்று’ எண்ண வைத்தான்.

பிரிஸ்பன் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் வழங்கிய வில்லுப்பாட்டு மிக அருமை. ஆங்கில மொழிச் சூழலில் வளரும் நாம் ஏன் தமிழ்ப்பள்ளி செல்லவேண்டும், தமிழ் படிப்பதால் என்ன பயன் என்று விளக்கி பாடினார்கள்.

இரண்டே வாரத்தில் பயிற்சி செய்து அகத்தியர் நாடகத்தை அரங்கேற்றிய தாய்த் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், பறை இசை முழங்கிய கலைஞர்கள், கவிதைகள் படித்த கவிஞர்கள், சிலம்பம் விளையாட்டுகள் என்று கண்டு, களிக்க அருமாயான நிகழ்ச்சிகளைக் கொண்டு தொகுத்து இருந்தார்கள்.

பட்டிமன்றம் - தமிழ் வளர்ப்பதில் பெரும் பணி தமிழ்ப்பள்ளிகளுக்கா? அல்லது மற்ற தமிழ் அமைப்புகளுக்கா என்று தலைப்பு. தமிழ்ப்பள்ளிகள் இல்லாததால்தான் Fiji, West Indies போன்ற நாடுகளில், வாழும் தமிழர்களுக்கு, தமிழ் பற்றிய அறிமுகமே ஏற்படுவதில்லை என்று ஒரு தரப்பு வாதாடினர். ‘அ’ ன, ‘ஆ’ வன் வேணா தமிழ்ப் பள்ளிகள் சொல்லிக் கொடுக்கலாம், அப்புறம் வாழ்நாள் முழுக்க தமிழ் பழக வாய்ப்புகளை qtm, taq, 4eb போன்ற தமிழ் அமைப்புகள்தான் உருவாக்கி தமிழ் வளர்க்கின்றன என்று இன்னொரு தரப்பு.

சரி, தமிழ் வளர்ப்பதில், யார் பெரும்பங்கு வகிக்கிறார்கள் என்று முடிவை தெரிந்துகொள்ள, பட்டிமன்ற நடுவர் திருமதி. லலிதா அவர்களின் உரையை ரொம்ப எதிர்பார்த்தோம். இரண்டு தரப்பு வாதங்களின் சுருக்கங்களையும் சொல்லிப் பாராட்டிவிட்டு, தமிழ் வளர்ப்பதில் பெரும்பங்கு, இங்கு வளரும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கே என்று எதிர்பாரா திசையில் (Out of the court) பந்தை திருப்பிவிட்டுக் கைதட்டல்களை அள்ளினார்.

திரு. சங்கர் அவர்கள், நிகழ்ச்சித் தொகுப்பு செய்தார். இரவு உணவும் மலிவான விலையில் தரமாக, சுவையுடன் இருந்தது!

விழாவுக்கு நேரில் வராத தமிழார்வலர்களுக்காக வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டால் நல்லா இருக்குமே என்று நினைத்தேன். சித்திரசேனன் (@
J&J studio Lebon Photography Australia)
(https://www.facebook.com/JJ-studio-Lebon-Photography-Australia-951135845084743/) இணைந்து வெளியிட்டுவிட்டனர்.

முத்தமிழ் விழாவை தவற விட்டிருந்தால், யுட்யூபில் காணொளிகள் உள்ளன. இணைப்புகள், இதோ பகுதி வாரியாக.

குறள் நேரம்

நடனம் - பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை

நாடகம் - தாய்த் தமிழ்ப் பள்ளி

வில்லுப்பாட்டு - பிறிஸ்பேன் தமிழ்ப் பாடசாலை

பாடல் - லெட்ஸ்மா ஈஸ்வர்

கவிதை - தமிழ்

நடனம் - அதிதி மனோகரன் 

கவிதை - கீழடி

சாதனைத் தமிழர்கள்

நடனம் - வலன்டீனா ரவிராஜ் 

ஐயை - திரை முன்னோட்டம்

சிரிப்போம் சிந்திப்போம் 

சிலம்பம் - தாய்த் தமிழ்ப் பள்ளி

பறையிசை

பட்டிமன்றம் 1

பட்டிமன்றம் 2

பட்டிமன்றம் 3

பட்டிமன்றம் 4


QTM நடத்தும் அடுத்த தமிழ்நதி நிகழ்வு மார்ச் 21, 2021 நடை பெற இருக்கிறது. இதைப் படிக்கிற நீங்களும் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.


வாழ்க குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றம்! வளர்க தமிழ்!!!

#QTM #குயீன்ஸ்லாந்து ##QueenslandTamils #TamilCommunity #தமிழ் ##தமிழ்வளர்ப்போம் #ஆஸ்திரேலியா

Comments

Popular posts from this blog

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.   முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;   ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல;  ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் கேட்க,  அடுத்த பதின

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்

கல் தோன்றி, மண் தோன்றா

  “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி”  இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.   முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.   அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)   சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் வரும் பாடல்தான் அது.  பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?  வையகம் போர்த்த, வயங்கு ஒலிநீ