Skip to main content

Queensland Elections 2020 குயின்ஸ்லாந்து மாநில தேர்தலில் போட்டியிடும் தமிழர்

 முன்குறிப்பு: இதை என்னுடைய சொந்த கருத்து மட்டுமே. நான் சார்ந்திருக்கும் நிறுவனங்களின் கருத்து அல்ல.


‘உலகத் தேர்தல்களில் முதன்முறையாக, அமெரிக்க தேர்தலில் ஒரு தமிழர் போட்டி', 'இங்கிலாந்து தேர்தலில் வென்ற தமிழர்' என்று செய்திகள் பார்க்கும்போதெல்லாம் ‘பரவாயில்லையே, தமிழ் நாட்டிலேர்ந்து நம்ம ஆளு ஒருத்தர் போய்,  அந்த நாட்டுல போட்டி போடறாங்களேன்னு ஒரு நிமிடம் பெருமையா இருக்கும். ஆனா, பக்கத்திலே வெள்ளைக்கார போட்டோவைப் போட்டு 'இவருதான், அவரு'னு இருக்க படத்தை பார்த்தால் 'அடச்சை, இவரயா நினைச்சு பெருமைப்பட்டோம்' என்றாகிவிடும். 


இப்ப ட்ரெண்டிங்-கில் இருக்கும் அமெரிக்க சித்தி கமலா ஹாரிஸ் மிகச்சிறந்த உதாரணம். ம்ம்ம்ம்..இல்லாத ஊருக்கு, இலுப்பை பூ தான் சர்க்கரை. 


அக்டோபர் மாதம் 31ம் தேதி நடக்க இருக்கும் குயின்ஸ்லாந்து மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர் திரு. பழனிச்சாமி (@PalaniForMaiwar) அவர்கள் தமிழ் நாட்டில், மதுரைக்கு அருகிலுள்ள அருகிலுள்ள புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்து, பின் ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்தவர். தற்போது ஆட்சியில் இருக்கும் தொழிலாளர் (லேபர்) கட்சி சார்பில், மேவார் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை, மெல்பன் (விக்டோரியா), ஸிட்னி (நியூ சவுத் வேல்ஸ்) பகுதிகளில் தமிழர்கள் தேர்தல் களத்தை சந்தித்துள்ளனர்; இம்முறை குயின்ஸ்லாந்தில்!


நடுகுறிப்பு: மேவார் தொகுதியின் கீழ் வரும் புறநகர் பகுதிகள்: மவுண்ட் கூட்-தா (Mount Coot-Tha), பார்டன் (Bardon), ஆக்கன்ப்ளவர் (Auchenflower), டூவாங் (Toowong), தரிங்கா (Taringa), இந்தூரூபில்லி (Indooroopilly), செயின்ட் லூஷியா (St Lucia) மற்றும் ஃபிக் ட்ரீ பாக்கெட்  (Fig Tree Pocket).


தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை கொஞ்சம்தான் தெரியும். 

திரு. பழனிச்சாமிக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு அவரின் கடுமையான உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பலன் என்பதில் சந்தேகமில்லை. 


அதே வேளையில், இது பல்லின மக்களிடையே, குறிப்பாக இந்திய, தமிழ் மக்களிடயே உள்ள ஒற்றுமை/இணக்கத்துக்கு வைக்கப்பட்ட ஒரு சவால். இந்த வாய்ப்பை தந்ததின் மூலம், உள்ளூர் அரசியல்வாதிகள் நம்மை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்று தெரிகிறது. லேபர் கட்சி, நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்று (மற்றொன்று லிபரல் கட்சி).


திரு. பழனி அவர்கள் பெறப்போகும் வாக்குகள், வரும் காலத்தில் உள்ளூர் அரசியல் களத்தில் காலூன்ற நினைக்கும் குயின்ஸ்லாந்துவாழ் பல்லின/இந்திய/தமிழ் மக்கள் அனைவருக்குமான நம்பிக்கை விதைகள். 


திரு. பழனி அவர்கள், இந்த தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று, பல்லின மக்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக சிறக்க வாழ்த்துகள். 


ஆஸ்திரேலிய குடியுரிமை வாங்கி இருந்தால், தவறாமல் உள்ளூர் அரசியலில் பங்கெடுங்கள்.


பின்குறிப்பு: தமிழர் என்பதற்காக மட்டும் வாக்களிக்க மாட்டீர்கள் என்று தெரியும்; நல்ல சட்டமன்ற உறுப்பினராக திரு. பழனி அவர்கள் வருவாரென்று  நீங்கள் நினைத்தால் தங்கள் ஆதரவை அளியுங்கள்.


-திரு


#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை


மற்ற பதிவுகள் https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன் 


facebook.com/#ஆஸிதமிழன்


Comments

Popular posts from this blog

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.   முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;   ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல;  ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் கேட்க,  அடுத்த பதின

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்

கல் தோன்றி, மண் தோன்றா

  “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி”  இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.   முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.   அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)   சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் வரும் பாடல்தான் அது.  பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?  வையகம் போர்த்த, வயங்கு ஒலிநீ