Skip to main content

அனஸ்டேஷீய பேலஷே


சென்ற மாதம் க்வீன்ஸ்லாண்ட் மாநில முதல்வர் (Premier) அனஸ்டேஷீய பேலஷே (Annastacia Palaszczuk MP), பிரிஸ்பனில் இருக்கும் இந்திய சமூக அமைப்புகளை விருந்துக்கு (Indian Community Reception) அழைத்திருந்தார். அனைவரையும் அழைத்து, ஒருங்கிணைத்தது குயின்ஸ்லாந்தின் இந்திய சமூகங்களின் கூட்டமைப்புக்கு (Federation of Indian Communities of Queensland (FICQ) |...) நன்றி.

ஏறத்தாழ 500 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தாய்த் தமிழ்ப் பள்ளியின் (Thaai Tamil School Inc ) சார்பாக முதல்வரையும், பல்லினக் கலாச்சார அமைச்சர் (Multicultural Minister) ஸ்டிர்லிங் ஹின்ச்கிலிஃப் (Stirling Hinchliffe MP)-யும் சந்தித்தோம். முதல்வருக்கு காலில் அடிபட்டிருந்ததால் அவரால் ரொம்ப நேரம் இருக்க முடியாது என்று அமைச்சர் சொன்னார். மயில்-கழுத்து வண்ண பட்டுப்புடவையை அழகாய் உடுத்தி வந்திருந்தார் முதல்வர்.



க்வீன்ஸ்லாண்ட் அரசு பல்லினக் கலாச்சாரத்தை (Multiculturalism) ஒரு முக்கிய பலமாக பார்ப்பதை வலியுறுத்தினார். க்வீன்ஸ்லாண்டில் ஒவ்வொரு இனக்குழுவும் தம் சொந்தக் கலாச்சார அடையாளங்களையும் கொண்டிருக்க, அவரவர் மொழிகளை, வளர்க்கத் தடை ஏதுமில்லை என்றார். அனைவரும் சமுதாய நல்லிணக்கத்தோடு, க்வீன்ஸ்லாண்ட்-ஐ சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு இதுவரை தந்துவரும், இனி தரப்போகும் உழைப்புக்கு நன்றிகள் சொன்னார்.

முதல்வரோட படம் எடுத்துக்கொள்ள ஒரு குழுவுக்கு அரை நிமிடம், குறைந்தது நான்கு பேர் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாய்ச்சொல்லி இருந்தார்கள். நாங்களோ மூன்று பேர். நாங்கள் கொண்டு சென்ற நினைவுப்பரிசு முதல்வரை கவர்ந்ததாலோ, என்னவோ வெறுங்கையோடு வந்தவர்களை போல அவசர, அவசரமாய் தள்ளாமல், உதவியாளர்கள் கொஞ்ச நேரம் கொடுத்து படம் எடுக்க உதவினர்.

முதல்வரின் பெயரை தமிழ் எழுத்துக்களில் எழுதிய நினைவுப் பரிசை வழங்கினோம். மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு 'இதுவா என் பெயர்? தமிழ்-ல எழுதினா கூட ரொம்ப நீளமா இருக்கே' என்று சுய எள்ளல் செய்து சிரித்து, எங்களையும் சிரிக்க வைத்தார்.

அப்போதுதான் கற்றுக்கொண்ட "நன்றி" என்னும் வார்த்தையை சொல்லி வழி அனுப்பினார் அமைச்சர்! பல்லினக் கலாச்சார அமைச்சர்-னா சும்மாவா? அவரை மட்டும் மறுபடி தனியாக பார்த்து தமிழ்ப்பள்ளிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். வருவதாக உறுதியளித்துள்ளார், பார்க்கலாம்!

பின் வருவது எனக்கு மட்டுமான குறிப்பு: இப்படி வருடத்திற்கு ஒரு முறை, ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளைப் பார்த்து போட்டோ எடுத்து பேஸ்புக், வாட்ஸப்பில் பீற்றிக்கொள்வதோடு நிறுத்தாமல், உள்ளூர் அரசியலைத் தெரிந்துகொண்டு, ஈடுபாட்டோடு பங்காற்ற வேண்டும்!

 -திரு

 #தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை

Comments

Popular posts from this blog

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.   முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;   ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல;  ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் கேட்க,  அடுத்த பதின

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்

கல் தோன்றி, மண் தோன்றா

  “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி”  இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.   முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.   அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)   சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் வரும் பாடல்தான் அது.  பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?  வையகம் போர்த்த, வயங்கு ஒலிநீ