“கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி” இந்த Punch Dialogue-ஐ சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப் பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும். முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர் பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன். அதெப்படி? கல், மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை விட அவ்வளவு பழமையானதா? ன்னு ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes) சரி, எங்கே இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்...
Comments
Great post!thanks for sharing!while many companies rack their brains to come up with something innovative,most don't and it's a goddamn pity!